Home இலங்கை சமூகம் வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0

அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பல கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

வாகன இறக்குமதி

இதன்படி பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முதலில் இறக்குமதி செய்யப்படும்.

வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

“அனைத்து வகையான வாகனங்களும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

அதன்படி, அன்று முதல் முதல் கார்கள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், பிக்கப்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். இறக்குமதி தடை நீக்கப்பட்ட பின்னர், உரிமம் பெற்றவர்கள் தங்கள் உரிமத்தின்படி வாகனங்களை இறக்குமதி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version