இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்(sri-jayawardenepura-university) மீண்டும் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தரின் கூற்றுப்படி, செப்டம்பர் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும்.
விடுதிகளுக்குத் திரும்பலாம்
செப்டம்பர் 23 திங்கள் முதல் அனைத்து மாணவர்களும் தங்கள் விடுதிகளுக்குத் திரும்பலாம் என்றும் துணைவேந்தர் அறிவித்தார்.
இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து செப்டம்பர் 12 அன்று மாலை 6:00 மணிக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
மோதலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.