Home முக்கியச் செய்திகள் பறவைக்காய்ச்சல் எதிரொலி : அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

பறவைக்காய்ச்சல் எதிரொலி : அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

0

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்கினப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் (Directors of Health Services) விடுத்துள்ளது.

தேவையில்லாத அச்சம்

அந்த வகையில், பல நாடுகளில் மீண்டும் தலைதூக்கியுள்ள பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமி நுண்ணுயிர் நுளம்பு உள்நுழைவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல (Dr. Hemali Kothalawala) குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது குறித்து தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் மேலும் கோரியுள்ளார்.  

Source: https://ibctamil.com/article/sri-lanka-ban-animal-product-imports-amid-bird-flu-1719153184?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version