Home இலங்கை சமூகம் அதிக கட்டணம் அறவிட்டால் உடனே அழையுங்கள்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அதிக கட்டணம் அறவிட்டால் உடனே அழையுங்கள்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ள நிலையில், அறவிட வேண்டிய கட்டணத்தை விட அதிகமாக கட்டணங்கள் அறவிடப்பட்டால் பொதுமக்கள் முறைப்பாடளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட  கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு  எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முறைப்பாடுகளை வழங்கலாம்

அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள்  குறித்து பயணிகள் தங்களது முறைப்பாடுகளை  வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு இயக்கப்படும் மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பேருந்துகள்  தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கம் 1955 அல்லது, வட்ஸ் ஆப் இலக்கம் 071 25 95 555 இற்கு பயணிகள் முறைப்பாடுகளை அளிக்கலாம்.

இலங்கை போக்குவரத்து சபையின்  பேருந்துகள் மற்றும் மாகாண பேருந்து சேவை வழங்குநர்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மாகாண அதிகார சபைக்கு 1958 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

NO COMMENTS

Exit mobile version