Home இலங்கை அரசியல் முக்கிய அரசியல்வாதிகள் பலரின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டிய அநுரவின் வெற்றி

முக்கிய அரசியல்வாதிகள் பலரின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டிய அநுரவின் வெற்றி

0

தோல்வியில் இருந்து தப்பிப்பதற்காக ஊழல் அரசியல்வாதிகள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி ஆகும்.

தேர்தலில் இருந்து பின்வாங்கிய அரசியல்வாதிகள் 

தோல்வியில் இருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத் தேர்தலிற்கு முனு்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெரும் வெற்றி.

அநுர குமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்துள்ளது.

  

ஜனாதிபதி தேர்தலில் அநுர குமாரவிற்கு வாக்களித்ததன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர். இது இறுதியில் ஊழல் அரசியல்வாதிகளை அகற்றியது.  

தோல்வியை தவிர்ப்பதற்காக இந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

 

You may like this,

NO COMMENTS

Exit mobile version