Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

0

முடிந்தவரை தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) அரச அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அநுரவின் அறிவிப்பு

பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க அமைச்சர்கள் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version