Home முக்கியச் செய்திகள் இது ஆரம்பம்தான் : தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட அறிவிப்பு

இது ஆரம்பம்தான் : தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட அறிவிப்பு

0

இலங்கையின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(sunil handunnetti) தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி,இந்த ஜனாதிபதி பதவிக்கு பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாடு காணாது என உறுதியளித்தார்.

பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் ஜனாதிபதி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் தங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும்

நாடாளுமன்றம் கலைக்கப்படுமெனவும், அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“இது ஆரம்பம்தான் மக்களின் அங்கீகாரத்துடனும் உதவியுடனும் இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம்” என சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.  

NO COMMENTS

Exit mobile version