Home இலங்கை அரசியல் ஜனநாயக கடமையாற்றியுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள்!

ஜனநாயக கடமையாற்றியுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள்!

0

இலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்றைய தினம் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர்.

அந்தவகையில், முக்கிய அரசியல் பிரமுகர்களும் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) இன்றைய தினம் தன்னுடைய வாக்கினை கட்டப்பிராய் சனசமூக நிலையத்தில் காலை 10 மணியளவில் செலுத்தியுள்ளார்.

மாவை சேனாதிராஜா

யாழ்.மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

செந்தில்தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில்தொண்டமான், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை பண்டாரவளை நகர விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியுள்ளார். 

அனந்தி சசிதரன்

அத்துடன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரனும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்தன்

புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தனும் (Dharmalingam Siddarthan) தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் முகமாக வாக்கினை செலுத்தியுள்ளார்.

https://www.youtube.com/embed/f4wdVkuP6SQ

NO COMMENTS

Exit mobile version