Home இலங்கை அரசியல் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்: ரிஷாட் வெளியிட்ட அறிவிப்பு

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்: ரிஷாட் வெளியிட்ட அறிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியூதீன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரிஷாட் பதியூதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கட்சியின் உயர்பீடம் கூடி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version