Home முக்கியச் செய்திகள் ஏப்ரலில் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்

ஏப்ரலில் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்

0

கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த இலங்கையின் பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளமை கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப் பதிவான உணவுப் பணவீக்கம் ஏப்ரலில் 2.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் மார்ச்சில் 0.5 சதவீதம் எனும் குறிப்பிடத்தக்களவிலான சுருக்கத்தைப் பதிவுசெய்த உணவல்லாத பணவீக்கம் ஏப்ரலில் 0.9 சதவீதமாக அதிகரித்தது.

மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் ஏப்ரலில் -0.79 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

கொள்கலன் செயற்பாட்டுத் திறனில் சாதனை : துறைமுக அதிகாரசபை வெளியிட்ட தகவல்

உணவுப்பொருட்களின் விலை

இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 0.32 சதவீத வீழ்ச்சியும், உணவல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட 0.47 சதவீத வீழ்ச்சியும் காரணமாக அமைந்துள்ளன.

அதேவேளை பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் பதிவான 3.1 சதவீதத்திலிருந்து ஏப்ரலில் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

இது இவ்வாறிருக்க பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடையுமென மத்திய வங்கி  (Central Bank of Sri Lanka) எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை! வெளியானது அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்….

NO COMMENTS

Exit mobile version