Home இலங்கை அரசியல் இலங்கையில் இலட்சத்தினால் அதிகரித்துள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை !

இலங்கையில் இலட்சத்தினால் அதிகரித்துள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை !

0

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் அதிபர் தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி பட்டியல்

அத்தோடு, எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி இறுதி பட்டியல் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் இரண்டு இலட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு

இந்தநிலையில், அடுத்த மாதம் 17 ஆம் திகதியின் பின்னர் அதிபர் தேர்தல் தொடர்பில் தீர்மானப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,  ஜுலை மாத இறுதியல் அதிபர் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அநேகமாக வெளியிடப்படும் என தெற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-sees-two-lakh-voter-increase-1718773166

NO COMMENTS

Exit mobile version