Home இலங்கை அரசியல் பொதுக்கட்டமைப்பு ஊடாக தமிழர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி : விக்னேஸ்வரன் வெளிப்படை

பொதுக்கட்டமைப்பு ஊடாக தமிழர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி : விக்னேஸ்வரன் வெளிப்படை

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளருக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்திருப்பது என்பதே பெரிய விடயம்.

சேர,சோழ, பாண்டியன் காலத்திலிருந்தே தமிழர்கள் பிரிந்தே உள்ளனர். தற்போது நாங்கள் ஒற்றுமைப்பட்டுள்ளோம் என்பேதே தமிழர்களுக்கு பெரிய விடயம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை வேட்பாளர்கள் அனைவரும் சிங்கள பௌத்த நிலையிலேயே நிலைத்து நிற்கிறார்கள்.அவர்கள் அனைவரும் குட்டையில் ஊறிய மட்டைகள்.

ஆளுமையற்ற சிங்கள தலைவர்கள்

அவர்கள் அனைவரும் ஆளுமையுடன் இந்த நாட்டை ஆட்சி செய்யவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி அவர்கள் நினைத்திருந்தால் நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றாக கருதி பாகுபாடு இல்லாமல் நாட்டை நடத்தி வந்திருப்பார்கள்.

ஆகவே சிங்கள பௌத்த சிந்தனையில் ஊறியிருப்பவர்களை நான் ஆளுமையாக கருதுவதில்லை.

இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன்.

ஐபிசி தமிழ் களம் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் மேலும் தெரிவித்தவை காணொளியில்…..   

https://www.youtube.com/embed/-YXTeInIVgM

Source: https://ibctamil.com/article/tamils-got-a-great-deal-general-candidate-1725969442

NO COMMENTS

Exit mobile version