Home இலங்கை அரசியல் ஈரான் : இஸ்ரேல் மோதல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து : அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை

ஈரான் : இஸ்ரேல் மோதல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து : அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை

0

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நிலவும் மோதல்கள் தீவிரமடைந்தால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு பாதகமான நிலை ஏற்படும் என அதிபர் ரணிலின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

“ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால் இலங்கை போன்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்படும், அத்தகைய சூழ்நிலையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும்” என்று விஜேவர்தன இன்று பியகமவில் நடைபெற்ற புத்தாண்டு கூட்டத்தில் கூறினார்.

கிடுகிடுவென உயரவுள்ள பெட்ரோலின் விலை! மீண்டும் வரிசையுக அபாயம்

இலங்கை வரும் ஈரான் அதிபரிடம்

“அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் இந்த விடயத்தை எடுத்துரைப்பார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பஞ்சிகஹவத்தையில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு கப்பலில் வரவுள்ளவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

பொறுத்திருந்து பாருங்கள்

மே 1ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்கதியிலிருந்து யார் எங்களுடன் இணைவார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்.

ஒரு முக்கிய இடத்தில் மே தினக் கூட்டத்தை நடத்துவதைத் தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூற்றுக்களை அவர் மறுத்தார்.

நாசாவுடன் இணைந்து செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்…!

“ஐக்கிய மக்கள் சக்கதி தலைமையானது கொழும்பு மாநகர சபை மற்றும் காவல்துறையினரிடம் இவ்வாறான முயற்சி பற்றி பேச வேண்டும். மே தின ஊர்வலங்களின் போது கட்சிகளுக்கு இடையில் மோதல்களைத் தடுப்பது போன்ற முக்கிய அம்சங்களை காவல்துறை போன்ற நிறுவனங்கள் கவனிக்கின்றன என்பதை ஐக்கிய மக்கள் சக்கதி புரிந்து கொள்ள வேண்டும்” என்று ருவான் விஜேவர்தன மேலும் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version