Home முக்கியச் செய்திகள் அவுஸ்திரேலியாவிற்கு வெறுங்கையுடன் சென்று கோடீஸ்வரனான இலங்கை இளைஞன்

அவுஸ்திரேலியாவிற்கு வெறுங்கையுடன் சென்று கோடீஸ்வரனான இலங்கை இளைஞன்

0

கடந்த 2015 ஆம் ஆண்டு கல்விக்காக அவுஸ்திரேலியா (australia) சென்ற இலங்கை (sri lanka) இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

25 வயதான வினுல் கருணாரத்ன என்ற இளைஞரே கோடீஸ்வரரானவராவார்.

அவர் தற்போது மெல்பேர்னில் வசித்து வருகிறார்.

அவுஸ்திரேலியா சென்றபோது அவரிடம் அதிக பணம் இருக்கவில்லை.

ஓய்வு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் பணி

கல்வி பயிலும் போது, ​​இரவு நேரத்தில் தற்காலிகமாக ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தார்.

ஓய்வு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

வருமானம் நன்றாக இருந்ததால், பின்னர் அங்குள்ள பிரபல இணையத்தளமான ஏர்டாஸ்கரில் (Airtasker) சேர்ந்தார்.

இணையத்தளம் பல்வேறு சேவை வழங்குநர்களுக்கு உதவுகிறது.

தற்போது, ​​அந்த இணையத்தளத்துடன் தொடர்புடைய முதல் 10 சம்பாதிப்பாளர்களில் வினுலும் ஒருவராக மாறி உள்ளார்.

அவரது தினசரி வருமானம்

வினுலின் சேவைகளுக்கு அதிக தேவை இருப்பதாகவும், அவரது தினசரி வருமானம் 1,000-1,400 அவுஸ்திரேலிய டொலர்கள் என்றும் கூறப்படுகிறது.

அவர் தனது கனவான காரை வாங்குவதற்கும், இலங்கையில் வசிக்கும் தனது பெற்றோருக்கு ஒரு வீட்டை வாங்குவதற்கும் தனது உழைப்பை பயன்படுத்தியுள்ளார்.

தற்போது முழு நேரமும் உழைக்கும் வினுல், அங்கு வீடு வாங்கி மற்ற துறைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version