Home இலங்கை அரசியல் நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

0

நியூசிலாந்தின் வெலிங்டனில் (New Zealand Wellington) இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை அடுத்து, அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சாரம் (Pradeepa Saram) தலைமையிலான உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழு  நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

குறித்த விஜயமானது ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​தூதுக்குழுவினர் நியூசிலாந்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உட்பட பிற நிறுவனங்களுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடன் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்க குடிமகனான பிரித்தானிய இளவரசர் ஹாரி – வெளியான பின்னணி

இலங்கைச் சமூகம்

நியூசிலாந்தில் கணிசமான அளவில் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க இலங்கை வெளிநாட்டவர் சமூகம் உள்ளமையால் உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வலுவான ஒத்துழைப்பைப் பின்தொடர்வதற்கும் இது சாதகமாக அமையவுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து 2021இல் இலங்கையில் ஒரு உயர்ஸ்தானிகராலயத்தை திறந்துள்ளதுடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் காணப்படுகின்றது.

இன்று முதல் பொது மன்னிப்பு காலம்: வெளியானது அறிவிப்பு

இலங்கையில் மக்களின் காவலனாக வாழ்ந்த அரசியல்வாதி – அலையென குவிந்த மக்கள் வெள்ளம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version