Home முக்கியச் செய்திகள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கவிருக்கும் அரச துறையினர்

மீண்டும் போராட்டத்தில் குதிக்கவிருக்கும் அரச துறையினர்

0

அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். 

குறித்த போராட்டமானது எதிர்வரும் 09ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேதன அதிகரிப்பு

அந்தவகையில், வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version