Home இலங்கை சமூகம் வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

0

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரியும் இலங்கை பெண் ஒருவர், தாம் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக முறையிட்டுள்ளார்.

தனது சேவைக் காலம் முடிவதற்குள், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளரினால், தாம் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருவதால், தன்னை விரைவில் இலங்கைக்கு அழைக்குமாறும் அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.


உரிமையாளரினால் சித்திரவதை

ஹொரவ்பொத்தானை – வில்லேவாவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இந்த பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.

எனினும், தான் பணி புரியும் வீட்டின் உரிமையாளர்கள் தம்மை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/sri-lankan-women-tortured-in-saudi-arabia-1718683464

NO COMMENTS

Exit mobile version