Home முக்கியச் செய்திகள் நான்கே மாதங்களில் இஸ்ரேலுக்கு பறந்துள்ள பெருந்தொகையிலான இலங்கையர்கள்

நான்கே மாதங்களில் இஸ்ரேலுக்கு பறந்துள்ள பெருந்தொகையிலான இலங்கையர்கள்

0

2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Foreign Employment Bureau) தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தாதியர், விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய மூன்று துறைகளிலும் இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைகளைப் பெற முடியும்.

அதன்படி, தாதியர் தொழிலுக்கு 409 பேரும், கட்டுமானத் துறைக்கு 804 பேரும், விவசாயத் துறைக்கு 1558 பேரும் வெளியேறியுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ள மைத்திரி

பெரும் வளர்ச்சி

மேலும், மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் மேலும் 172 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைக்காகச் செல்ல உள்ளனர்.

2023 இல் 1912 இலங்கையர்கள் மாத்திரமே இஸ்ரேலில் வேலைக்காக சென்றுள்ளனர், இதன்படி இந்த வருடம் இஸ்ரேலுக்கு வேலை தேடும் இலங்கையர்களின் பெரும் வளர்ச்சியைக் காட்டுவதாக பணியகம் கூறுகிறது.

பகிரங்க விவாதத்தை தவிர்க்கும் சஜித்: குற்றம் சாட்டும் அனுர!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

NO COMMENTS

Exit mobile version