Home இலங்கை கல்வி இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

0

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG) இன்று (மே 15) நாட்டின் 11வது பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக அதிகாரபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

2005 ஆம் ஆண்டு நிர்வாக சேவை பிரிவைச் சேர்ந்த இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சிறப்பு தர அதிகாரியான லியனகே, முன்னர் பாடசாலை பரீட்சைகள் பிரிவு மற்றும் பரீட்சை துறையின் நிர்வாகம் மற்றும் பரீட்சை திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் ஆணையராகப் பணியாற்றினார்.

 கல்வித் தகமைகள்

காலியில் உள்ள சங்கமித்தா பாலிகா வித்தியாலயத்தின் முன்னாள் மாணவியான இவர், முன்னர் கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் முதல்வராகப் பணியாற்றினார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுகலைப் பட்டமும், களனி பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version