Home இலங்கை அரசியல் தமிழர் பகுதியில் 26 விகாரைகளை அமைக்க சஜித் இட்டுள்ள அடித்தளம்

தமிழர் பகுதியில் 26 விகாரைகளை அமைக்க சஜித் இட்டுள்ள அடித்தளம்

0

திருகோணமலை (Trincomalee) – குச்சவெளி பகுதியில் சுமார் 26 விகாரைகளை அமைப்பதற்கான திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே முன்மொழிந்துள்ளதாக மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை (Kayts) பகுதியில் நேற்று (16) தமிழ்த் தேசிய பொதுகட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது குண்டு வீச்சுக்களும். கொலைகளும் .இன்னும் பல மனித உரிமை மீறல்களும் இடம்பெற்ற போது தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பாத பெளத்த  இன வெறியன் தான் சஜித் பிரேமதாச.

மேலும் ஒரு மந்திரியாக அவர், 1000 விகாரைகள் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

தமிழ் மண்ணில் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு நூற்றுக்கணக்கான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குச்சவெளியில், 26 விகாரைகளுக்காக சுமார் 3887 ஏக்கர் நிலம், அதாவது ஒரு விகாரைக்கு கிட்டத்தட்ட 150 ஏக்கர் என்ற வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை, இவ்வாறான ஒரு கருத்தை விதைத்தது சஜித் பிரேமதாச ஆகும்”

மேலும் அவர் கூறுகையில்,

https://www.youtube.com/embed/kORfkiFQNGU

NO COMMENTS

Exit mobile version