Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் துணுக்காய் – மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு

தமிழரசுக் கட்சியின் துணுக்காய் – மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு

0

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட இலங்கை (Sri Lanka) தமிழரசுக் கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளை, தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.

குறித்த அறிவிப்பை இன்று (17) மாலை மல்லாவி நகரில் ஒன்றுகூடிய முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளை முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிட்டவர்கள் கலந்துரையாடி வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தமிழரசுக் கட்சி

இந்தநிலையில், தமிழரசுக் கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில்
தொடர்ச்சியாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் கட்சிக்குள் நிலவி வருகின்ற போதும்
நேற்று (16) கட்சி உத்தியோக பூர்வமான இறுதி முடிவை அறிவித்தது.

இதனடிப்படையில், இன்றையதினம் (17) இலங்கை தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள்
தமிழ்ப் பொது வேட்ப்பாளர் அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) ஆதரவு வழங்குவதாகவும் மக்கள்
அனைவரையும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனின் சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version