Home இலங்கை அநுரவின் வரவின் பின் இந்தியாவுடன் மோதுவதற்கு தயாராகும் சீனா

அநுரவின் வரவின் பின் இந்தியாவுடன் மோதுவதற்கு தயாராகும் சீனா

0

 அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) பதவியேற்ற பின்னர் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாகவும், இது இந்தியாவுடன் மோதும் போக்கை கொண்டிருப்பதாகவும் உள்ளதாக
அமெரிக்க சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அவர்,

“2022இல் இலங்கையில்(Sri lanka) பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, சீனா(China) கிட்டதட்ட தனது செல்வாக்கை இழக்கின்ற போக்கு காணப்பட்டது.

இந்தியா மாறாக 4 பில்லியனுக்கும் அதிகமான உதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தார்கள்.அதன் காரணமாக இந்தியாவின் கை ஓங்கியிருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போதைய நிலையில் சீனா மீண்டும் உள்வந்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பாரியளவு நிதியை சீனா அநுர அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள்.

எனவே சீனா மீண்டும் உள்வந்து இந்தியாவுடன் மோதும் போக்கு காணப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

Source: https://tamilwin.com/article/srilanka-india-china-realationship-economy-crisis-1738794870

NO COMMENTS

Exit mobile version