Home இலங்கை பொருளாதாரம் நாட்டை கடன் பெற்றே முன்னெடுத்துச் செல்ல நேரிட்டுள்ளது! விஜித ஹேரத்

நாட்டை கடன் பெற்றே முன்னெடுத்துச் செல்ல நேரிட்டுள்ளது! விஜித ஹேரத்

0

நாட்டை கடன் பெற்றே முன்னெடுத்துச் செல்ல நேரிட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொறிமுறை

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் பிணை முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களை விநியோகம் செய்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை நேற்று தெரிவித்துள்ளார். 

   

நாடு கடன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுச் செல்வதாகவும் ஆட்சி பொறுப்பினை ஏற்று 24 மணித்தியாலங்களில் புது வருமானம் கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே உள்நாட்டு ரீதியான கடன் பெற்றுக்கொள்ளும் பொறிமுறைமையை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version