Home இலங்கை அரசியல் பிரான்ஸ் பொபினி நகரத்தின் முதல்வரை சந்தித்த சிறீதரன் எம்.பி

பிரான்ஸ் பொபினி நகரத்தின் முதல்வரை சந்தித்த சிறீதரன் எம்.பி

0

பிரான்ஸ்(France) – பொபினி (Bobigny) நகரத்தின் நகரசபை முதல்வர் அப்தெல் சாடிக்கும் (Abdel Sadi)இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் (S.Sritharan)இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது
பொபினி (Bobigny) நகரசபையில் நேற்று (12.06.2024) இடம்பெற்றுள்ளது.

முக்கிய சந்திப்பு

இந்த சந்திப்பில் இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்றுவரும் கட்டமைக்கப்பட இனவழிப்பு மற்றும் நில அபகரிப்புகள், அரசியல் கைதிகளின் விடுதலை, இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சந்திப்பு பிரான்சில் தொடர்ச்சியாக அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் தமிழ் பண்பாட்டு வலயத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version