Home இலங்கை அரசியல் பிரான்ஸ் பொபினி நகரத்தின் முதல்வருக்கும் சிறீதரன் எம்.பிக்கும் இடையில் சந்திப்பு

பிரான்ஸ் பொபினி நகரத்தின் முதல்வருக்கும் சிறீதரன் எம்.பிக்கும் இடையில் சந்திப்பு

0

பிரான்ஸ்(France) – பொபினி (Bobigny) நகரத்தின் நகரசபை முதல்வர் அப்தெல் சாடி (Abdel Sadi)க்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பொபினி (Bobigny) நகரசபையில் நேற்று (12.06.2024) இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடல்

குறித்த சந்திப்பில் இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்காக நீதி மற்றும் இலங்கையில் தமிழர்களும் நடைபெற்றுவரும் கட்டமைக்கப்பட இனவழிப்பு மற்றும் நில அபகரிப்புகள், அரசியல் கைதிகளின் விடுதலை இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பற்றிய கலந்துரையாடப்பட்டுள்ளன. 

மேலும், குறித்த சந்திப்பு பிரான்சில் தொடர்ச்சியாக அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் தமிழ் பண்பாட்டு வலையம் பிரான்சினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/sritharan-mp-met-france-bobigny-head-1718283559

NO COMMENTS

Exit mobile version