Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் இளநீர் செய்கையை அதிகரிக்க விசேட நடவடிக்கை!

இலங்கையில் இளநீர் செய்கையை அதிகரிக்க விசேட நடவடிக்கை!

0

இலங்கை இளநீருக்கு  சர்வதே சந்தையில்  காணப்படும் கேள்விக்கு அமைய இளநீர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் 85 இளநீர் உற்பத்தி கிராமங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய அரசின் அதிரடி தீர்மானம்: விதிக்கப்படவுள்ள தடை

புதிய இளநீர் வகை

நாட்டில் ஏற்றுமதியை நோக்கமாக கொண்டு, புதிய இளநீர் வகைகளை செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,எதிர்வரும் சிறுபோகத்தை அடிப்படையாகக் கொண்டு வறண்ட வலயத்தில் 15,000 ஏக்கரில் நிலக்கடலை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கூடிய விளைச்சலை தரக்கூடிய நிலக்கடலை விதைகளை பயன்படுத்த விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

NO COMMENTS

Exit mobile version