திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிராஜ் நகர் பிரதான வீதியில் தொடருந்து கடவையின் அருகாமையில் உள்ள மின்
கம்பத்தின் மின் குமிழ் பல நாட்களாக செயலிழந்துள்ளது.
இதன் காரணமாக இரவு நேரம் தொடருந்து பயணம் செய்யும் போது குறித்த கடவையில்
இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
திடீர் விபத்து
இதனால் திடீர் விபத்து சம்பவங்கள் ஏற்படலாம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த மின் கடவை பகுதியின் அருகாமையில் உள்ள தெரு விளக்கை சீர் செய்து
பாதுகாப்பானதாக அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
