Home இலங்கை அரசியல் வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

எந்தவொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது

இதற்கமைய, தேர்தலன்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு (Election Commission) வேண்டுகோள் விடுத்துள்ளது.

கையடக்க தொலைபேசிகளுக்கு தடை

மேலும், காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version