Home இலங்கை சமூகம் பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து மாணவன் பலி

பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து மாணவன் பலி

0

கொட்டகலை (Kotagala) கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் தரம் 13 இல் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன்
தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சிவகுமார் நதீஸ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் உயிரிழந்த மாணவன், நேற்று (04) பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட்
விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால்
தடுக்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றில் சுவரில் மோதிய நிலையில் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாணவன், டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் திம்புள்ள – பத்தன காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18

Source: https://ibctamil.com/article/student-died-after-slipping-falling-in-the-shed-1728061364

NO COMMENTS

Exit mobile version