Home இலங்கை சமூகம் வவுனியாவில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

0

வவுனியாவில் (Vavuniya) அமைந்துள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்
மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த இரு தினங்களாக
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (20) வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் முறைப்பாடு

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலுள்ள  முன்னணி பாடசாலையில் தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது
அதே பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (18)  தாக்கியதாக
தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல் நிலையத்திலும் முறைப்பாடு
பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்கியதாக தெரிவிக்கப்படும் ஆசிரியர் இன்றையதினம் இரவுவரை
கைதுசெய்யப்படவில்லை என மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version