Home இலங்கை சமூகம் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் : அதிகாரிகள் எடுத்த முடிவு

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் : அதிகாரிகள் எடுத்த முடிவு

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் குடிவரவு அதிகாரிகளிடம் இலங்கைக்கு வந்ததன் நோக்கத்தை உரிய முறையில் தெரிவிக்கத் தவறிய காரணத்தால் அவர்கள் இருவரையும் நாடு கடத்துவதற்கு நேற்று (19) இரவு குடிவரவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான இந்த இரு வெளிநாட்டவர்களும் சீன (china)பிரஜைகள் போல் நடித்துக் கொண்டிருந்ததாகவும், அவர்களிடம் உள்ள சீன தேசிய கடவுச்சீட்டில் அவர்கள் பிறந்த இடமாக சீனாவிலுள்ள கிராமம் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 கம்போடிய மற்றும் துருக்கி பிரஜைகளின் கடவுச்சீட்டுகள்

மேலும், அவர்களிடம் கம்போடிய(cambodia) மற்றும் துருக்கி(turkey) பிரஜைகளின் உண்மையான கடவுச்சீட்டுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அரசின் சட்டத்தின்படி, அந்நாட்டு குடிமக்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க முடியாது, அவர்கள் வேறு நாட்டின் குடியுரிமை பெற்றால், சீன அரசின் குடியுரிமை ரத்து செய்யப்படும்.

36 மற்றும் 37 வயதுடைய இருவரும் நேற்று (19) இரவு 09.35 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சீன பிரஜைகள் கணினி குற்றங்கள் 

அங்கு குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்கான காரணம் குறித்து கேட்டபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை வழங்கவில்லை.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சீன பிரஜைகள் கணினி குற்றங்கள் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் பாரியளவில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருவதால், இதனைக் கருத்திற்கொண்டு இருவரையும் நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இவர்கள் இருவரையும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்ததையடுத்து கட்டுநாயக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பல அநாமதேய, செல்வாக்கு மிக்க தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version