Home இலங்கை அரசியல் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் பரீட்சை எழுதும் மாணவர்களால் உடைப்பு

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் பரீட்சை எழுதும் மாணவர்களால் உடைப்பு

0

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் இம்முறை பரீட்சை எழுதும்
மாணவர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
நடைபெற்று வருகின்றது.

பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பாடசாலை விஞ்ஞான
ஆய்வுகூடம் மற்றும் கணித கூடம் என்பவற்றின் கதவை உடைத்துள்ளதுடன் அங்கிருந்த
பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பரீட்சைப் பொறுப்பதிகாரி

இது குறித்து, குறித்த நிலையத்திற்கு பொறுப்பான பரீட்சைப் பொறுப்பதிகாரி
மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்திய
போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளார் பாடசாலைக்கு சென்று
நிலமையை பார்வையிட்டிருந்த போதும் மாணவர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும்
எடுகப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version