Home இலங்கை அரசியல் தாவ தயாராகும் அரசியல்வாதிகள்…! முந்திக்கொண்டு அநுரவை வாழ்த்திய எம்.ஏ.சுமந்திரன்

தாவ தயாராகும் அரசியல்வாதிகள்…! முந்திக்கொண்டு அநுரவை வாழ்த்திய எம்.ஏ.சுமந்திரன்

0

ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன – மத வெறிக்கு இடமளிக்காமல் அபார வெற்றி பெற்றதற்கு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலோசனையின் பேரில் மற்றவர்களை நிராகரித்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகூடிய வாக்கு

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்.

இந்தத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க 50 சதவீதத்துக்கும் மேல் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வருவதால் இரண்டாம் சுற்றுக்குக்குச் செல்லாமல் முதல் சுற்றிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் (National People’s Power) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version