தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் பெரும்பான்மை ஆதரவை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இதனையடுத்தே, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்ரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுமந்திரனின் அணுகுமுறையால் தமிழரசுக் கட்சி மத்திய குழுவின் பெரும்பான்மையான ஆதரவையும் அவர் தற்போது பெற்றுக்கொண்டதாக பாலா மாஸ்ரர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
