பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காவிட்டால் புதிய அரசாங்கம் நகைச்சுவையாளர்களாக மாறும் என ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொண்டவாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நூல் வெளியீடு
இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் நூல் வெளியீட்டில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” மற்றும் “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” ஆகிய இரு முக்கிய நூல்களின் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
