Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு சுமந்திரன் எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு சுமந்திரன் எச்சரிக்கை

0

“தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளர்
சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின்
உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் உறுப்பினராக வந்தாலே வழக்குத்
தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமான செயற்பாடு

தனியார் ஊடகம் ஒன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் இது சட்டவிரோதமான செயற்பாடு என்றும் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version