Home முக்கியச் செய்திகள் தமிழரசு கட்சியின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு !

தமிழரசு கட்சியின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு !

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mawai Senadhiraja) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கட்சியின் நிலை குறித்து இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வமான அறிவிப்பு 

அத்தோடு, இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் (C. Sridharan) மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) பங்கேற்கவில்லை.

மேலும், கட்சியின் மற்றுமொரு முக்கியஸ்தர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் (Yogeswaran) மற்றும் ஸ்ரீநேசன் (Sreenesan) ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version