Home இலங்கை அரசியல் ரணிலுக்கு ஆதரவை வழங்க முன்வந்த தமிழ் எம்.பி

ரணிலுக்கு ஆதரவை வழங்க முன்வந்த தமிழ் எம்.பி

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிளவர் வீதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அவர் முதலதைடவையாக தெரிவானார்.

இதனையடுத்து 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version