Home முக்கியச் செய்திகள் அடித்து நொறுக்கப்பட்ட நாடாளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரது கடை

அடித்து நொறுக்கப்பட்ட நாடாளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரது கடை

0

அம்பாறையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரது கடை இனந்தெரியாதோரினால் அடித்து நொறுக்கபட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் பிரதான வீதியில் அமைந்துள்ள தற்காலிக கடை ஒன்றே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

ஆதரவாளரது கடை

உடைக்கப்பட்ட கடை, அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் ஐந்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் பிரகாஸின் ஆதரவாளரது கடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த கடை தாக்கப்பட்ட  இடத்திற்கு வேட்பாளர் பிரகாஸ் சென்று சேதமடைந்த
கடையை பார்வையிட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் 

இதையடுத்து, தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு அளிக்க ஆதரவாளருடன் சென்றுள்ளார்.

இதன்போது காவல் நிலையத்தில் குறித்த முறைப்பாடு ஏற்றுக்கொள்ளாமையின் காரணமாக இலங்கை
மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று (28) முறைப்பாடு செய்ய எண்ணியுள்ளதாக
பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த
கடையில் அரசியல் விடயங்களை தாங்கள் உரையாடுவதாகவும் இதனால் இக்கடை உடைப்பு
ஏனைய தரப்புகளால் உடைக்கப்பட்டிருக்க கூடும் என வேட்பாளர் பிரகாஸ்
தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version