Home இலங்கை அரசியல் இ.தொ.காவிலிருந்து விலகிய சுரேஸ்குமார்

இ.தொ.காவிலிருந்து விலகிய சுரேஸ்குமார்

0

Courtesy: Aadhithya

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தி மஸ்கெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினராக பதவி வகித்த சுப்ரமணியம் சுரேஸ்குமார் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். 

அவர், இன்று (17) அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

கட்சியின் நடவடிக்கைகள் 

இந்நிலையில், அவர், “இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அண்மைய நடவடிக்கைகளினால் விரக்தி நிலையில் காணப்பட்டது. 

இனி இ.தொ.காவுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அத்துடன் இனிவரும் காலங்களில் தனது அரசியல் பயணம் மலையக மக்கள் முன்னணியுடனே செல்லும்” என தெரிவித்து வேலுசாமி இராதாகிருஷ்ணனுடன் சுப்ரமணியம் சுரேஸ்குமார் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version