Home இலங்கை சமூகம் யாழில் விசேட சுற்றிவளைப்பு: 14 சந்தேகநபர்கள் சிக்கினார்கள்

யாழில் விசேட சுற்றிவளைப்பு: 14 சந்தேகநபர்கள் சிக்கினார்கள்

0

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட
சுற்றிவளைப்புகளில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

திடீர் சுற்றிவளைப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த மூன்று நாள்களாக சில இடங்களில் திடீர்
சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர்.

இதன்போது, ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, கசிப்பு
மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 14
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் இருவர் மேல் நீதிமன்ற
வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version