Home முக்கியச் செய்திகள் வவுனியாவில் கொலை செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டவர் : இருவர் கைது

வவுனியாவில் கொலை செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டவர் : இருவர் கைது

0

சுவிஸ் (Switzerland) நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா (Vavuniya) வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது கடந்த 26 ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், செல்லத்துரை விமலநாதன் (Chelathurai Vimalanathan) என்ற 66 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முரண்பாடுகள் 

குறித்த நபர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்துள்ளார்.

அந்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது விருந்தில் ஈடுபடட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இரசாயன பகுப்பாய்வு

இதனையடுத்து, சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்தவரும் மற்றும் சுவிஸில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வருகை தந்து வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வந்த நபர் ஒருவரும் கனகராயன்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வீட்டில் இருந்த சிசிடிவி கமரா இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version