யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளைஞனர் ஒருவர் மீது வன்முறைக் கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியை சேர்ந்த இளைஞனர் ஒருவர் மீதே இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் காவல்துறை
இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் காவல்துறையினர்,வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ள காவல்துறையினர் குறித்த தாக்குதல் முன் பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/embed/APVLneP_68E
