Home முக்கியச் செய்திகள் யாழில் வாள்வெட்டு தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்: ஒருவர் படுகாயம்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்: ஒருவர் படுகாயம்

0

யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் நேற்று(01)  வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தனியாக சென்ற ஒருவர் மீது, முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய குழுவினர்
இந்த வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

மேலதிக விசாரணை

இந்நிலையில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version