Home உலகம் சிரியாவை ஆக்கிரமிக்கும் கிளர்ச்சியாளர்கள்! தப்பிய ஜனாதிபதியின் நிலை

சிரியாவை ஆக்கிரமிக்கும் கிளர்ச்சியாளர்கள்! தப்பிய ஜனாதிபதியின் நிலை

0

டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியா நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.

கிளர்ச்சியாளர்களின் ஆக்கிரமிப்பு 

முன்னதாக சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

இந்த சூழலில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி ஆட்சியை பிடித்துள்ளனர்.

அத்துடன்,  50 வருட ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி 

இந்நிலையில், டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரிய தலைநகர் டமஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் காரணமாக அரச படைகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளன.

இதேவேளை, உலகெங்கிலும் உள்ள சிரிய மக்கள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியின் வீழ்ச்சியைக் கொண்டாடி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/syria-president-takes-refuge-in-moscow-1733722295

NO COMMENTS

Exit mobile version