Home இலங்கை அரசியல் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது நல்லிணக்கத்தை பாதிக்கும் : எச்சரிக்கிறது மொட்டு

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது நல்லிணக்கத்தை பாதிக்கும் : எச்சரிக்கிறது மொட்டு

0

 சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மத்தியகுழு உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம், தமிழர்களின் பொது வேட்புமனுவை ஆதரிக்கும் யோசனை குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார்.

இதனால் நாட்டில் நடைபெற்று வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு வேண்டுமென்றே இடையூறு ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

 ஜனாதிபதி பதவியின் கவனம் இனம் அல்ல, கொள்கைகள் மற்றும் தகுதிகளில் இருக்க வேண்டும் என்று காசிலிங்கம் வலியுறுத்தினார். 

 தேசிய நல்லிணக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும்

இனப் பிளவுகளை வலியுறுத்துவது தமிழர் பிரச்சினையை பலவீனப்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

“தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், சாத்தியமான வீழ்ச்சிக்கு தென்னிலங்கையைக் குறை கூறக்கூடாது,” என்று அவர் கூறினார்.

தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயல்

தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகளை எடுத்துக்காட்டிய அவர், “சாதாரண மக்களே இதனால் பாதிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

தீவிரவாதத்தைத் தூண்டும் ஆபத்துக்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான அணுகுமுறைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

வடக்கிற்கு முதலீடுகளை ஈர்த்தல்

மேலும்,  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், வடக்கிற்கு முதலீடுகளை ஈர்த்தல், பிராந்தியத்தை வர்த்தக மையமாக மாற்றுவது, உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சமூகங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பிரிவினையை வளர்க்ககூடாது என வலியுறுத்தினார்.

தனிநாடு என்ற தீவிர சித்தாந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து சமூகங்களுக்கும் நவீன மற்றும் அமைதியான இலங்கையில் அனைத்து சமுகங்களும் வாழவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version