Home இலங்கை அரசியல் யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

0

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்
தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் (P. Ariyanethran) தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி
செலுத்தியுள்ளார்.

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால்
ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒரு கட்டமாக இன்றையதினம் (27.8.2024) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தியாக தீபம் நினைவுத் தூபி

யாழ்ப்பாணம் (jaffna) நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்
தூபியில் இருக்கும் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து
மலரஞ்சலி செலுத்தியிருத்தார்.

இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும்
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து
கொண்டு அஞ்சலி செலுத்தி பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்திருந்தனர். 

மேலும், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் (P. Ariyanethran) தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு நேற்றைய தினம் (26) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி விசேட கலந்துரையாடலில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

NO COMMENTS

Exit mobile version