Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளருக்கு வெற்றி கிடையாது…சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கம்

தமிழ் பொது வேட்பாளருக்கு வெற்றி கிடையாது…சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கம்

0

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரன் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் தமிழ் பொது வேட்பாளருக்கு தனது வாக்கை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே, சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

அதன் போது கருத்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நான் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக இன்று கொழும்பு வந்தேன்.

அரியநேத்திரனுக்கு வாய்ப்பு 

இந்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை என்னால் கூற முடியாது. எனினும், தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரன் வெற்றி பெற மாட்டார் என்பதை உறுதியாக கூற முடியும்.

இலங்கையில் ஒருபோதும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு ஜனாதிபதியாக வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை. இதற்கமைய, அரியநேத்திரனுக்கும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது.

அத்துடன், இந்த தேர்தலில் நாம் எந்தவொரு வேட்பாளருக்கும் இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கவில்லை.  

NO COMMENTS

Exit mobile version