Home இலங்கை அரசியல் சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்துக் குருமார் அமைப்பு

சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்துக் குருமார் அமைப்பு

0

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்(R. Sampanthan) காலமாகியுள்ள நிலையில், அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எமது தமிழினம் ஓர் பெரும் பலத்தினை இழந்த சூழலில் உள்ளது.

இரங்கல் பதிவு

சுமார் ஆறு தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கித் ஆற்றல்மிகு சக்தியாக தமிழ் மக்கள் மத்தியில் விளங்கிய ஓர் பண்புமிக்க அறிவாளனை இழந்துள்ளோம்.

இராஜதந்திர நகர்வுகளை செய்யும் சிறப்பாளர். பல்வேறு நாட்டு தலைவர்களாலும் இராஜதந்திரிகளாலும் மதிக்கப்பட்டவர்.

எமது தமிழ் பிரதிநிதிகளை ஓர் அணியாக செயற்பட வேண்டும் என செயற்பட்டவர். நிதானமாக நுண்ணறிவுடன் செயலாற்றிய, தலைமை தாங்கிய தலைவரை இழந்துள்ளோம்.

இச்சமயத்தில் அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் இறை பிரார்த்தனை செய்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரா.சம்பந்தனின் மரணத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்த, சரத்பொன்சேகா என முக்கிய அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version