Home இலங்கை அரசியல் அநுரவிடம் தமிழக கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

அநுரவிடம் தமிழக கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

0

இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும், பொதுமன்னிப்பு
அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தமிழக கடற்றொழிலாளர்கள்
சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை
இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது.

புதிய ஜனாதிபதிக்கு நன்றி

இதில் ஒரு வருடமாக இலங்கைச் சிறையில் இருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த ரொபர்ட் என்ற கடற்றொழிலாளரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்றொழிலாளர் விடுதலை செய்யப்பட உள்ளமைக்காக தமிழக கடற்றொழிலாளர்கள் புதிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version